Thursday, December 5, 2019

† புனிதர் சப்பாஸ் † (டிசம்பர் 5)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 5)

✠ புனிதர் சப்பாஸ் ✠
(St. Sabbas the Sanctified)

வணக்கத்துக்குரிய தந்தை/ மடாதிபதி:
(Venerable Father/ Abbot)

பிறப்பு: கி.பி. 439
செசெரியா மஸாகா, கப்படோஸியா
(Caesarea Mazaca, Cappadocia)

இறப்பு: டிசம்பர் 5, 532
ஜெருசலேம், பாலஸ்தீனம் பிரைமா
(Jerusalem, Palaestina Prima)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலம்:
தூய சப்பாஸ் மடாலயம், கிட்ரோன் பள்ளத்தாக்கு
(Saint Sabbas Monastery, Kidron Valley)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 5

புனிதர் சப்பாஸ், ஒரு கப்படோசியன் சிரியன் துறவியும் (Cappadocian-Syrian monk), குருவும் (Priest), பாலஸ்தீனத்தில் (Palaestina Prima) வாழ்ந்திருந்த புனிதருமாவார். இவரது பெயர் அராமைக் (Aramaic) மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அராமைக் மொழியில் இதன் அர்த்தம், முதியவர் என்று வரும். இவர், எண்ணற்ற பல்வேறு துறவு மடங்களை நிறுவினார். இவர் நிறுவிய மடங்களில் முக்கியமானது, "மார் சபா" (Mar Saba) மடாலயம் ஆகும்.

புனிதர் சப்பாஸ், கப்படோஸியாவின் (Cappadocia) "செசெரியா மஸாகா" (Caesarea Mazaca) அருகேயுள்ள "முட்டலாஸ்கா" (Mutalaska) எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை, இராணுவ தளபதியான (Military Commander) "ஜான்" (John) என்பவராவார். இவரது தாயாரின் பெயர், "சோஃபியா" (Sophia) ஆகும்.

இராணுவ பணிகளின் காரணமாக "அலெக்ஸ்சாண்ட்ரியா" (Alexandria) பயணித்த இவரது பெற்றோர், ஐந்து வயதான இவரை இவரது தாய்மாமனிடம் விட்டுச் சென்றனர். இவருக்கு எட்டு வயதாகையில், இவர் அருகேயிருந்த "ஆயர் ஃபிளேவின்" (Bishop Flavian of Antioch) என்பவரது துறவு மடத்தில் சேர்ந்தார். புத்திசாலியான சிறுவன், விரைவிலேயே கற்றுத் தேர்ந்து, பரிசுத்த வேதாகமத்தின்பேரில் ஒரு நிபுணர் ஆனார். மீண்டும் இவ்வுலக வாழ்க்கைக்கு திரும்பவும், திருமணம் செய்துகொள்ளவும் அழுத்தம் தந்த இவரது பெற்றோரின் ஆலோசனைகளை சப்பாஸ் தீர்க்கமாக நிராகரித்தார்.

அவர் பதினேழு வயதானபோது, துறவற சமயச் சடங்குகளுக்காக தலையை முழுவதுமாக மழித்துக்கொண்டார் (Monastic Tonsure). பத்து வருடங்கள் "ஆயர் ஃபிளேவின்" (Bishop Flavian of Antioch) துறவு மடத்தில் செலவிட்ட அவர், பின்னர் அங்கிருந்து ஜெருசலேம் (Jerusalem) பயணித்தார். பின்னர் அங்கிருந்து, புனிதர் பெரிய யூத்திமியஸ் மடாலயம் (Monastery of Saint Euthymius the Great) சென்றார். ஆனால், புனிதர் பெரிய யூத்திமியஸ் அவரை அங்கிருந்து, அருகாமையிலுள்ள கண்டிப்பான செனொபிடிக் விதிகளைக் (Strict Cenobitic Rule) கடைபிடிக்கும் "அப்பா தியோக்திஸ்டஸ்" (Abba Theoctistus) எனும் மடாதிபதியின் மடாலயத்திற்கு அனுப்பினார். சப்பாஸ், தமது முப்பது வயது வரை இந்த மடாலயத்தில் கீழ்ப்படிதலுடன் வசித்தார்.

மூத்த "அப்பா தியோக்திஸ்டஸ்" (Abba Theoctistus) இறந்த பிறகு, அவரது பின்வரும் வாரிசு, சப்பாசை ஒரு குகையில் ஒதுங்கி வாழுமாறு ஆசீர்வதித்தார். சனிக்கிழமைகளில், அவர் தனது வசிப்பிடத்தைவிட்டு, மடாலயத்திற்கு வந்து, அங்கு அவர் தெய்வீக சேவைகளில் கலந்துகொண்டு சகோதர துறவியர்களுடன் உணவு உண்பார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தன் வசிப்பிடத்தை விட்டு வெளியேறாதபடி சப்பாஸ், அனுமதி பெற்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் குகைக்குள் தனியாக வாழ்ந்தார்.

புனிதர் பெரிய யூத்திமியஸ் (Saint Euthymius the Great), இளம் துறவியின் ஆவிக்குரிய முதிர்ச்சியைக் கண்டு, அவருடைய வாழ்க்கையை கவனமாக வழிநடத்தி, அவரை தம்முடன் வனாந்தரத்தில் வாழ இட்டுச் சென்றார். அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம், 14ம் தேதி முதல், குருத்து ஞாயிறுவரை அங்கு தங்கினர். சப்பாசை மூத்த குழந்தை என்று அழைத்த புனிதர் பெரிய யூத்திமியஸ், அவரை துறவற நல்லொழுக்கங்களில் வளர ஊக்குவித்தார்.

சப்பாஸ் பல்வேறு மடாலயங்களை நிறுவினார். சப்பாஸின் ஜெபங்களின் மூலம் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வறண்ட காலத்தின் போது, இவரது ஜெபங்களின் மூலம் ஏராளமான மழையைப் பெற்றார்கள். நோய்வாய்ப்பட்டவர்களும் குணமானார்கள்.

கி.பி. 491ம் ஆண்டு, ஜெருசலேம் நகரின் குலபதி அல்லது பரம்பரைத் தலைவர் (Patriarch Salustius of Jerusalem), இவருக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார். கி.பி. 532ம் ஆண்டு, சப்பாஸ் மரணமடைந்தார்.

No comments:

Post a Comment