Saturday, November 30, 2019

† புனிதர் அந்திரேயா † (நவம்பர் 30)


† இன்றைய புனிதர் †
(நவம்பர் 30)

✠ புனிதர் அந்திரேயா ✠
(St. Andrew)

திருத்தூதர்/ முதல் அழைப்பு பெற்றவர்/ கிறிஸ்துவை அறிமுகம் செய்தவர்:
(Apostle/ The First-Called/ Introduced Jesus)

பிறப்பு: கி.மு. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு
பெத்சாய்தா, கலிலேயா, ரோம பேரரசு
(Bethsaida, Galilee, Roman Empire)

இறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதி
பட்ராஸ், அச்சையா, ரோம பேரரசு
(Patras, Achaia, Roman Empire)

ஏற்கும் சபை/ சமயம்: அனைத்து கிறிஸ்தவப் பிரிவுகளும்

முக்கிய திருத்தலங்கள்:
டூமோ கதீட்ரல், அமல்ஃபி, இத்தாலி
(Duomo Cathedral in Amalfi, Italy)
செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல், பட்ராஸ், கிரீஸ்
(St. Andrew's Cathedral, Patras, Greece)
செயிண்ட் மேரீஸ் கதீட்ரல், எடின்பர்க், ஸ்காட்லாந்து
(St. Mary's Cathedral, Edinburgh, Scotland)
செயிண்ட் ஆண்ட்ரூ மற்றும் செயின்ட் ஆல்பர்ட் ஆலயம், வார்சாவ், போலந்து
(The Church of St. Andrew and St. Albert, Warsaw, Poland)

நினைவுத் திருவிழா: நவம்பர் 30

சித்தரிக்கப்படும் வகை:
'X' வடிவ சிலுவை, ஏட்டுச்சுறுள்

பாதுகாவல் :
ஸ்காட்லாந்து, உக்ரைன், ரஷியா, சிசிலி, கிரேக்க நாடு, பிலிப்பைன்ஸ், ரூமேனியா, மீனவர், பாடகர், கர்ப்பிணிப் பெண்கள், இறைச்சி வெட்டுபவர்கள், கயிறு நெய்யும் தொழிலாளி, சைப்ரஸ், பட்ராஸ், பரான்ஹேக்கின் மறைமாவட்டம் (Diocese of Parañaque), அமாஃல்பி (Amalfi), லுக்கா (மால்டா) மற்றும் புருஸ்ஸியா (Luqa (Malta) and Prussia), விக்டோரியா மறைமாவட்டம் (Diocese of Victoria), பண்ணைத் தொழிலாளர்கள்

புனிதர் அந்திரேயா அல்லது புனிதர் பெலவேந்திரர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர் ஆவார்.

கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்த இவர், புனிதர் பேதுருவின் மூத்த சகோதரர் ஆவார். மீன் பிடி தொழில் செய்துவந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்த இவர், பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு, திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். (யோவான் 1:29-39).

அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே (யோவான் 6:8). கோவிலின் அழிவை முன்னறிவித்தபோது அழிவு எப்போது வரும்?” என கேட்டவரும் இவரே. ஆண்டவரின் இறுதி இராவுணவின்போது இவருமிருந்தார். இறுதிகால இயேசுவின் இரண்டாம் வருகையின் அறிகுறி என்னவென்று இயேசுவிடம் கேட்பதற்காக ஒலிவ மலைக்கு (Mount of Olives) வந்த நான்கு சீடர்களுள் இவரும் ஒருவராவார்.

புனிதர் அந்திரேயா, “மத்திய யூரேசியாவின்” (Central Eurasia) பிராந்தியமான “ஸ்கித்தியாவில்” (Scythia) பிரசங்கித்தார். கிரேக்க புராணங்களில் அறிவுமிக்க வயதான “நெஸ்டார்” (Nestor) எனும் அரசனின் காலக்கிரமமாகத் தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிக் குறிப்பின்படி, கருங்கடல் (Black Sea), “டினெபர் நதி” (Dnieper river) மற்றும் “உக்ரெய்ன்” (Ukraine) நாட்டின் தலைநகரான “கியேவ்” (Kiev) வரை அவர் பிரசங்கித்ததாகக் கூறுகிறார். அங்கு அங்கிருந்து வடமேற்கு ரஷியாவின் நகரான “நோவ்கோரோடு” (Novgorod) சென்றார். எனவே, அவர் “உக்ரேய்ன்” (Ukraine), “ரோமானியா” (Romania) மற்றும் “ரஷ்யாவின்” (Russia) பாதுகாவலர் ஆவார். பாரம்பரியங்களின்படி, பின்னாளில் கி.பி. 38ம் ஆண்டுகளில், “கான்ஸ்டண்டிநோபில் மற்றும் இஸ்தான்புல்” (Constantinople and Istanbul) என்று அறியப்பட்ட, பண்டைய கிரேக்க நகரான “பைசான்டியம்” (Byzantium) கண்டடைந்தார். ரோம் கிறிஸ்தவ திருச்சபையின் மூன்றாம் நூற்றாண்டின் மிக முக்கிய இறையியலாலர்களில் ஒருவரான “ஹிப்போலிட்டஸ்” (Hippolytus of Rome) என்பவரின் கூற்றின்படி, அந்திரேயா பண்டைய தென்கிழக்கு ஐரோப்பாவின் புவியியல் மற்றும் சரித்திரவியல் பகுதியான “திரேஸ்” (Thrace) எனும் பகுதிகளிலும் பிரசங்கித்தார்.

அந்திரேயா, கிரேக்கத்தின் பிராந்தியப் பகுதிகளுள் ஒன்றான “அச்சேயா” (Achaea) எனுமிடத்திலுள்ள “பட்ராஸ்” (Patras) நகரில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். இயேசு கிறிஸ்து அறையப்பட்ட அதேவிதமான சிலுவையில் தாமும் அரையப்பட தாம் தகுதியானவனில்லை என்ற காரணத்தால், அவரே “X” வடிவ சிலுவையில் தம்மை அரையுமாறு வேண்டினார் என்றும் கூறப்படுகிறது. அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றார். பட்ராசில் (Patras) உள்ள புனித அந்திரேயா ஆலயத்தில் இவரது புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment