Saturday, November 16, 2019

† ஸ்காட்லாந்து நாட்டின் புனிதர் மார்கரெட் † (நவம்பர் 16)



† இன்றைய புனிதர் †
(நவம்பர் 16)

✠ ஸ்காட்லாந்து நாட்டின் புனிதர் மார்கரெட் ✠
(St. Margaret of Scotland)

ஸ்காட்லாந்து அரசி:
(Queen of Scotland)

பிறப்பு: கி.பி. 1045
ஹங்கேரி அரசு
(Kingdom of Hungary)

இறப்பு: நவம்பர் 16, 1093
எடின்பர்க், ஸ்காட்லாந்து அரசு
(Edinburgh Castle, Edinburgh, Kingdom of Scotland)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

புனிதர் பட்டம்: 1250
திருத்தந்தை நான்காம் இன்னொசென்ட்
(Pope Innocent IV)

முக்கிய திருத்தலம்:
டுன்ஃபெர்ம்லின் மடம், ஃபிஃப், ஸ்காட்லாந்து
(Dunfermline Abbey, Fife, Scotland)

நினைவுத் திருவிழா: நவம்பர் 16

பாதுகாவல்:
ஸ்காட்லாந்து (Scotland), டுன்ஃபெர்ம்லின் (Dunfermline), ஃபிஃப் (Fife), ஷெட்லேண்ட் (Shetland), அரசியின் பயணப்படகு (The Queen's Ferry), ஆங்கிலோ-ஸ்காட்டிஷ் உறவுகள் (Anglo-Scottish relations)

ஸ்காட்லாந்து நாட்டின் புனிதர் மார்கரெட், “ஆங்கிலேய இளவரசர் எட்வர்ட்” (English prince Edward the Exile) மற்றும் “அகதா” (Agatha) ஆகியோரின் மகள் ஆவார். ஆங்கிலேய இளவரசியும் (English princess), ஸ்காட்டிஷ் அரசியுமான (Scottish queen) இவர், “ஸ்காட்லாந்தின் மார்கரெட்” (Margaret of Scotland) என்றும், “வெஸ்செக்ஸின்’ மார்கரெட்” (Margaret of Wessex) என்றும் அறியப்படுகிறார். சில சமயம், “ஸ்காட்லாந்தின் முத்து” (The Pearl of Scotland) என்றும் அழைக்கப்படுகிறார்.

ஹங்கேரி அரசில் பிறந்த இவரும் இவரது குடும்பத்தினரும் 1057ம் ஆண்டு, இங்கிலாந்து இராச்சியத்துக்குத் திரும்பினார்கள். மார்கரெட் 1057ம் ஆண்டிலிருந்து தன் மாமாவின் கண்காணிப்பில் இங்கிலாந்தில் வளர்ந்தார். 1066ம் ஆண்டு “நார்மன்” இங்கிலாந்தை வெற்றி கொண்டதும், (Norman conquest of England) இவரின் 20ம் வயதில் ஸ்காட்லாந்திற்கு திரும்பிச் சென்றார். அங்கே, 1070ம் ஆண்டின் இறுதியில், ஸ்காட்லாந்தின் அரசர் 3ம் மால்கோம் (King Malcolm III of Scotland) என்பவரிடம் பழகி, பின்னர் அவரையே திருமணம் செய்து, ஸ்காட்லாந்தின் அரசியானார். அவருடைய கணவர், அவரை கிறிஸ்தவ மறையை தழுவக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் அவர் தன் கணவரின் பேச்சை மறுத்து, மேலும் தன் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்தார்.

பக்தியுள்ள பெண்ணான அரசி, ஏழை மக்களின் வாழ்வில் அதிக அக்கறை கொண்டு வாழ்ந்தார். அவர்களுக்கு பலவிதங்களில் உதவினார். ஏழைகளை தன் இதயத்தில் சுமந்து உதவினார். தான் ஓர் அரசியாக இருந்தபோதும், துறவிகளைப் போலவே, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். தவறாமல் நோன்பிருந்து செபித்து பல நலன்களை பெற்றார். பலவிதங்களிலும் ஒறுத்தல் செய்து வாழ்ந்தார். அநேக தொண்டு பணிகளைச் செய்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு போரில் (Battle of Alnwick) கலந்துகொள்ள சென்ற இவரது கணவரான அரசர் “மூன்றாம் மால்கானு'ம்” (Malcolm III) அவரது இருபத்தியிரண்டே வயதான மூத்த மகன் “எட்வர்டும்” (Edward) 13 நவம்பர் 1093 அன்று கொல்லப்பட்டனர். ஐம்பது வயதுகூட பூர்த்தியாகாத மார்கரெட் ஏற்கனவே தொடர் நோன்பு மற்றும் ஒருத்தல்களினால் பலவீனமாக இருந்தார். தமது கணவரும் மூத்த மகனும் மரித்துப் போன செய்தியைக் செவியுற்ற அவர், மூன்றாம் நாளே (1093ம் ஆண்டு, நவம்பர் மாதம், 16ம் நாள்) மரித்தார். 1250ம் ஆண்டு, திருத்தந்தை “நான்காம் இன்னசன்ட்” (Pope Innocent IV) இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

No comments:

Post a Comment